கள்ளக்குறிச்சி: பங்குனி உத்திரத்தையொட்டி பெருமாள் திருக்கல்யாணம் கள்ளக்குறிச்சியில் கடந்த 13ம் தேதிமாலை நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பெருமாள் தாயார் உற்சவர்களுக்கு அலங்கார திருமஞ்சனம் செய்தனர். சிறப்பு அலங்காரம் செய்து, உள்பிரகாரம் வலம் வந்தபின், மண்டபத்தில் பெருமாள், தாயாரை எழுந்தருளச் செய்தனர். யாகம் வளர்த்தப்பின் பெருமாள், தாயார் திருக்கல்யாணம் நடந்தது. சாற்றுமுறை, சேவை, ஆராதனம், நெல் பொரி யாகத்திற்கு பின் மகாதீபாராதனை நடந்தது. தேசிக பட்டர் குழுவினர் வைபவத்தினை நடத்தினர்.