செஞ்சி: செஞ்சி காந்தி செல்வ விநாயகர் கோவிலில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு லட்ச தீப விழா நடந்தது. காலை சிறப்பு ஹோமமும், செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்தனர். பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றினர். பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை பெரியகரம் பகுதி மக்கள் செய்திருந்தனர். அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.