விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி டோல்கேட் அருகிலுள்ள தாமரை குளத்தில் உள்ள வீர ஆஞ்ச நேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 9மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து துளசி மாலை அலங்காரத்துடன் பூஜை நடந்தது. சந்தனக் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி யளித்தார் . விழுப்புரம், விக்கிரவாண்டி , ஆசூர், சாத்தனூர், பாப்பனப்பட்டு கிராம பக்த பஜனை குழுவினர் நாலாயிர திவ்ய பிரபந்த பஜனை பாடல்களை பாடினர். இரவு ஆஞ்சநேயர் வண்ண விளக்குகளுடன் வாண வேடிக்கையுடன் மாடவீதியாக வீதி உலா வந்தது. விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.