பாகூர்: சேலியமேடு ஆஞ்ஜநேயர் கோவிலில் லட்சதீப விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 10:00 மணிக்கு ஆஞ்ஜநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ௧1:30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு லட்சதீப விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு மின்விளக்கு அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடந்தது.