பெரம்பலூர் : பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. தொடர்ந்து உலக நன்மைக்காகவும், பருவ மழை பெய்து அனைத்து வளங்களும் பெருகவும் வேண்டி நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் , 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.