கண்டாச்சிபுரம்: கெடாரை அடுத்த அகரம் சித்தாமூர் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. அகரம் சித்தாமூர் கிராமத்தில் உள்ள பாலவிநாயகர், பாலமுருகன் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று காலை 9 மணியிலிருந்து 10. 30 மணிக்குள் பொம்மபுர ஆதினம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. சந்திரசேகர குருக்கள் தலைமையில் யாக சாலை பூஜைகள், சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது.