ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி, பூக்குழி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2014 12:04
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை புளியம்பட்டி திருநகரம் சாலியர் மகாஜன பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட, தெப்பக்குளம் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில், பங்குனி பொங்கல் விழா, கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடந்த நிகழ்ச்சியில், நேற்று முன்தினம், பொங்கல் விழா நடந்தது. பெண்கள் பக்தியுடன் விரதம் இருந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் விரதம் இருந்து, 51,101 தீச்சட்டி எடுத்து, நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று அதிகாலையில், பக்தர்கள் பக்தியுடன் பூக்குழி இறங்கினர். நேற்று இரவு 10 மணிக்கு அம்மன் வண்ண சப்பரத்தில் திருதேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.