ஒசூர் : ஒசூர் அருகேயுள்ள மத்திகிரி கூட்டுச் சாலை மாரியம்மன் கோயிலில் அலகு குத்தும் திருவிழா நடைபெற்றது.விழாவில் மத்திகிரி கூட்டுச் சாலையில் இருந்து கோயில் வரை அலகு குத்திக் கொண்டு பக்தர்கள் வந்தனர். இன்று தேர்த் திருவிழாவும், தீமிதித் திருவிழாவும் நடைபெற உள்ளன. முன்னதாக நடந்த விழாவில், பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டன.