Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநிகோயில் ரோப்கார்: மூன்று நாட்கள் ... திருத்தேரில் பவனி வந்த கரிகிருஷ்ண பெருமாள்: பக்தர்கள் பரவசம்! திருத்தேரில் பவனி வந்த கரிகிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாராரு... வாராரு... அழகர் வாராரு...: மே 14ல் வைகையில் இறங்குகிறார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஏப்
2014
10:04

அழகர்கோவில்: பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது தான். இதற்காக, மே 12 ல், அழகர்கோவிலில் இருந்து அழகர் புறப்படுகிறார். மே 14 காலை 6:30 மணிக்கு, வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா, மே 10 ல் துவங்குகிறது. முதல் 2 நாட்கள் காலை, மாலையில் பல்லக்கில் பெருமாள் கோயிலை வலம் வருகிறார். மே 12 மாலை 5:30 க்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன், கள்ளழகர் வேடத்தில் தங்கப் பல்லக்கில் அழகர் மதுரை புறப்படுகிறார். அன்று இரவு பக்தர்கள் அமைக்கும் மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். எதிர்சேவை: மே 13 காலை 6:00 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு புதூர், மாலை 6:00 மணிக்கு அவுட்போஸ்ட்டில் எதிர்சேவை நடக்கிறது. அன்றிரவு தல்லாகுளம் பெருமாள் கோயில் வரும் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. நள்ளிரவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்று, தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், அதிகாலை 3:00 மணிக்கு தல்லாகுளத்தில், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். ஆற்றில் இறங்குகிறார்: மே 14 ல், தங்கக் குதிரையில் புறப்படும் அவர், காலை 6:00 முதல் 6:30 க்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். அங்கிருந்து காலை 10:00 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு அழகருக்கு, தீர்த்தவாரி நடக்கும். இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலை அடைகிறார். மே 15 காலை சேஷ வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், பகலில் வைகையில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. மே 16 ல், காலை மோகன அவதாரத்தில் புறப்படும் கள்ளழகருக்கு, இரவு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நடக்கிறது. மே 18 ல், அழகர்கோவிலை சென்றடைகிறார். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் வரதராஜன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar