பதிவு செய்த நாள்
22
ஏப்
2014
10:04
பழநி: பழநி கோயில் உண்டியலில் 17 நாட்களில், ஒரு கோடியே 59 லட்சத்து 40 ஆயிரத்து 145 ரூபாய் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில், கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில், தங்கம் 566 கிராம். வெள்ளி 7 ஆயிரத்து 530 கிராம். வெளிநாடுகளின் கரன்சி 307 மற்றும் ரொக்கமாக 1 கோடியே 59 லட்சத்து 40 ஆயிரத்து 145 ரூபாய் கிடைத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியிலான, வேல், செயின், வளையல், மோதிரம், நாணயம், திருமாங்கல்யம், ஆள் ரூபம், கொலுசு, வீடு போன்றபொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.