பதிவு செய்த நாள்
25
ஏப்
2014
12:04
பொதட்டூர்பேட்டை: அப்பரடிகள் உழவார திருப்பணி திருவிழா, இன்று நடக்கிறது. இதற்கு, அமிர்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் தலைமையேற்பதாக, உழவார மன்றத்தினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர். பொதட்டூர்பேட்டை, அமிர்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், இன்று காலை 5:00 மணிக்கு, அப்பரடிகள் குரு பூஜை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, திருமறைகள் 14 சாஸ்தரங்கள், திருக்குறள் உள்ளிட்டவற்றை தலையில் சுமந்து, உழவார மன்றத்தினர் வீதியுலா வருகின்றனர். ஊர்வலத்தின் போது, பூத கண வாத்தியங்கள், மன்றத்தினரால் வாசிக்கப்படும். 10:00 மணிக்கு, அபிஷேகம் நடக்கிறது. 11:00 மணிக்கு, சொற்பொழிவு நடத்தப்படும். இந்த விழாவுக்கு, அகத்தீஸ்வர பெருமான் தலைமையேற்றுள்ளதாக, விழா குழுவினர், துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர்.