செஞ்சி : செஞ்சி தாலுகா காரியமங்கலம் கருணாசாயி பாபா ஆலயத்தில் முதலாம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா நடந்தது. 21ம் தேதி காலை 6 மணிக்கு கோபூஜை, 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 9 மணிக்கு 1008 கலச ஸ்தாபனம் நடந்தது. சாயி நாதருக்கு ஏக தின லக்ஷஜப ஹோமம்நடந்தது. 22ம் தேதி காலை 6 மணிக்கு மகா மிருத்தியுஞ்ஜய ஹோமம் நடந்தது. 9.20 மணிக்கு அன்ன தான கூட வாஸ்த்து பூஜை நடந்தது. 9.30 மணிக்கு கருணா சாயி பாபாவுக்கு 1008 கலச அபிஷேகம் நடந்தது. அனைத்து சன்னதி மூர்த்திகளுக்கும் கலசாபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு மகா சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. 12.30 மணிக்கு அன்னதானம் நடந்தது. கருணா சாயி டிரஸ்ட் தலைவர் ரகுநாதன், செஞ்சி பேரூராட்சி தலைவர் மஸ்தான், ஊராட்சி தலைவர் ராஜா, உபயதாரர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாலகணேஷ் குருக்கள் தலைமையிலான குழு வினர் பூஜைகளை செய்தனர்.