திரவுபதி அம்மன் பிரம்மோற்சவ விழாவில்.. கருட வாகனத்தில் சுவாமி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2014 12:04
பண்ருட்டி: பண்ருட்டி திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் கண்ணன் சுவாமி கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குஅருள்பாலித்தார்.பண்ருட்டி திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன்துவங்கியது. 15ம் தேதி பாஞ்சாலன் கட்டுண்ட உற்சவமும், 16ம் தேதி அரக்கு மாளிகை உற்சவமும்,17ம் தேதி பக்காசூரன் உற்சவமும், 18ம் தேதி திருக்கல்யாணமும், 19ம் தேதி பாண்டவர் வனம் புகுதல்நிகழ்ச்சியும் நடந்தது.கடந்த 20ம் தேதி அர்ச்சுனன் தபசும், 21ம் தேதிமாடு பிடி சண்டையும், 22ம் தேதி அரவாண் கடபலி,வெள்ளை யானை கடபலி நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று கர்ண மோட்சம் நடந்தது. கர்ண மோட்சம்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் கண்ணன் சுவாமிகள் கருட வாகனத்திலும், அர்ச் னன் சுவாமிகளின் சிறப்பு அலங்காரம் வீதியுலாவும் நடந்தது. இன்று மாலை களத்துமேடு பகுதியில் சக்கரவர்த்தி கோட்டை அழித்தல் நிகழ்ச்சியும், இன்று(25ம் தேதி) மாலை தீமிதி திருவிழாவும் நடக்கிறது. 26ம் தேதி மஞ்சள் நீர் நிகழ்ச்சி நடக்கிறது.