கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் மழை இல்லாததால் கடந்த 6 மாதங்களாக குடிநீர் பற் றாக் குறை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மழைவேண்டி சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அங்குள்ள ஏரியில் உள்ள எல்லை சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு . களி, கருவாட்டு குழம்பு படை யலிட்டு வழிபட்டனர். பெண்கள் மழை வேண்டி ஒப்பாரிவைத்தனர். கிராமபொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.