காஞ்சீபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் உண்டியலில் வசூலான காணிக்கை எண்ணப்பட்டது. காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோவில் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.இதில் ரொக்கப்பணம் ரூ.15 லட்சத்து 56 ஆயிரத்து 317 மற்றும் 25 கிராம் தங்கம், 110 கிராம் வெள்ளி இருந்தது.