Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நாகேசுவரசுவாமி கோவிலில் "சூரியபூஜை ... குபேர கணபதி திருக்கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் மே 9ல் சித்திரைத் திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
12:04

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா மே 9 ல் துவங்குகிறது. அன்று காலை 8.30 முதல் 10.15 மணிக்குள், மூலவர் பரமஸ்வாமி, உற்சவர் சுந்தரராஜப் பெருமாள் உள்ளிட்ட அனைத்து பரிவாரங்களுக்கும் காப்பு கட்டப்படும். பின்னர் கும்பங்கள் புறப்பாடாகி, யாகசாலையில் சேர்க்கையாகிறது. மே 12 வரை காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடந்து, தினமும் இரவு 8 மணிக்கு பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது. மே 13 காலை 10.31 முதல் 12.00 மணிக்குள் கும்பங்கள் புறப்பாடாகி, பெருமாள், கருப்பண்ணசாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. அன்று இரவு 2 மணிக்கு மேல், சுந்தரராஜப் பெருமாள் ஈட்டி, கத்தி, வளரி, வேல், கம்புடன், கோடாரி கொண்டையிட்டு, "கள்ளழகர் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான தீவெட்டிகள் வெளிச்சத்தில், புஷ்ப பல்லக்கில் புறப்பாடாகி, கருப்பண்ணசாமியிடம் விடைபெற்று, வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். மே 14 ல் காலை 9 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க, பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன், குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். மதியம் 2 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்திலும், நாள் முழுவதும் முக்கிய வீதிகளின் வழியாக, இரவு 9 மணிக்கு காக்காதோப்பு பெருமாள் கோயிலை அடைகிறார். மறுநாள் மாலை சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனமும், இரவு முழுவதும் விடிய, விடிய தசாவதாரத்தில் காட்சியளிக்கிறார். மே 16 கருடவாகனம், மே 17 ல் ராஜாங்க திருக்கோலம், மே 18 ல் காலை 7 மணிக்கு பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன், புஷ்பபல்லக்கில் எழுந்தருகிறார். நாள் முழுவதும் வீதியுலா வந்து மாலை 5 மணிக்கு கோயிலுக்குள் செல்கிறார். அன்றிரவு கண்ணாடி சேவை நடக்கிறது. மறுநாள் உற்சவசாந்தியும், மே 20 ல் பால்குடத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான மானேஜிங் டிரஸ்டி அகஸ்தியன், டிரஸ்டிகள் மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar