Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவிலில் சிறப்பு உற்சவ ... சேத்தூர் எக்கலாதேவியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
12:04

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன், நேற்று விமரிசையாக துவங்கியது. இதில், பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தஞ்சையிலுள்ள பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா விமரிசையாக நடத்தப்படும். இதன்படி, நடப்பாண்டும் சித்திரை திருவிழா நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, சின்னமேளம் நிகழ்ச்சியில், சங்கீத் நாடக அகாடமி தலைவர் லீலா சாம்சன் பங்கேற்றார். தொடர்ந்து, இரண்டாம் நாளான, இன்று (26ம் தேதி) பல்லக்கு நிகழ்ச்சி, சிம்ம வாகனத்தில் விநாயகர் ஸ்வாமி எழுந்தருளுதலும் நடக்கிறது. பெங்களூரு குமாரி சுவேதா புரோகிட் சகோதரிகள் நாட்டிய நிகழ்ச்சியும், 27ம் தேதி பல்லக்கு நிகழ்ச்சியும், மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளும் காட்சியும் நடக்கிறது. கோவை கிரியாஞ்சலி நாட்டியப்பள்ளி சார்பில், நாட்டியம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 28ம் தேதி விநாயகருக்கு சந்தனகாப்பும், மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் எழுந்தருளும் காட்சியும் நடக்கிறது. தொடர்ந்து, திருச்சூர் பாலாஜி கலா பவன் சார்பில், நடன நிகழ்ச்சியும், 29ம் தேதி சுப்பிரமணியர் பல்லக்கு புறப்பாடும் நடக்கிறது. சுப்பிரமணியர் ஸ்வாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளும் காட்சி, கோவா நிருத்யாலயா குழுவினர் நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 30ம் தேதி நால்வர் பல்லக்கில் கோவிலுக்குள் புறப்பாடும், சூரிய பிரபையில் சந்திரசேகரர் எழுந்தருளும் காட்சியும் நடக்கிறது. தொடர்ந்து, சென்னை, பரத நாட்டியாலயா குழுவினர் நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மே, 12ம் தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி கமிஷனர் செந்தில்குமார், கோவில் செயல் அலுவலர் அரவிந்தன், கண்காணிப்பாளர் அசோகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar