Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜூனியர் தீமிதி திருவிழா: ... சிவலோகநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு! சிவலோகநாதர் கோவிலில் சனி பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக முக்கிய கோயில்களில் மழைக்காக சிறப்பு யாகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஏப்
2014
12:04

திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோயில்களில் மழை வேண்டி இன்று யாகம் நடத்தப்படுகிறது. திருநெல்வேலிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கும் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 35 அடியாக குறைந்துவிட்டது. மொத்தம் 143 அடி உயரம் கொண்ட அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 63 அடியாக இருந்தது. எனவே மழையில்லாமல் இதே நிலை தொடர்ந்தால், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பெரும் சிக்கல் ஏற்படும். எனவே அறநிலையத்துறையினர் மூலம் முக்கிய கோயில்களில் இன்று காலை 5.55 மணிக்கு வருண ஜெபம் நடத்தப்படுகிறது. நெல்லையப்பர் கோயிலில் சுவாமி சன்னதிக்கு முன்பாக உள்ள பிரதோஷ நந்தியை சுற்றிலும் சுவர் எழுப்பி நந்தியின் கழுத்து அளவுக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. கண்ணன் சாஸ்திரிகள் தலைமையில் 11 வேத விற்பன்னர்கள் மேற்கொள்கின்றனர். அதே நேரத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று அமிர்த வர்ஷினி, மேக வர்ஷினி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி ஆகிய ராகங்களில் பாடல்கள் இசைக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் செயல்அலுவலர் யக்ஞ நாராயணன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

திருப்போரூரில்..: தமிழகம் முழுவதும் மழை வேண்டி பிராத்தனையின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள சரவண பொய்கையில் மார்பளவு தண்ணீரில் நின்று உத்ராட்சை மாலையுடன் இன்று காலை 5.30 மணிக்கு பிராத்தனை துவங்கியது.

மதுரையில் ..: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் சார்பில், மழை வேண்டி இன்று(ஏப்., 28) சிறப்பு யாகம் நடக்கிறது.அதிகாலை 5.55 மணிக்கு தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடக்கிறது. முக்தீஸ்வரர், திருவாப்புடையார், திருமறைநாதர் கோயில்களிலும் வழிபாடுகள் நடக்கின்றன.மீனாட்சி கோயில் சுவாமி சன்னதி வீரவசந்தராயர் மண்டபத்தில், நந்திக்கு நீர் நிரப்பி வழிபாடு நடக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமுறை மற்றும் திருஞான சம்பந்தர் இயற்றிய 12ம் திருமுறை மேகராககுருச்சிப்பண் ஓதப்படுகிறது. இசை வழிபாடும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar