Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமாவாசையை முன்னிட்டு பண்ணாரியில் ... கோவில் நிலம் மீட்கக்கோரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தோமையார் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2014
12:04

மணப்பாறை: மணப்பாறை அருகே உள்ள மலையடிப்பட்டியில் பாஸ்கா திருவிழா மற்றும் தோமையார் தேரோட்டம் நடந்தது. மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில், 129 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித தோமையார் மலைத்திருத்தலம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பாஸ்கா திருவிழா மற்றும் தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடப்பது வழக்கம். இந்தாண்டு கடந்த, 21ம் தேதி புத்தாநத்தம் பங்குத்தந்தை ஜேசுராஜ் திருப்பலி நிறைவேற்றி தூய தோமையார் திருக்கொடியை ஏற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, 24ம் தேதி மற்றும் 25ம் தேதி நடந்த ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் பாஸ்கா மற்றும் தூம்பா பவனி ஆகிய நிகழ்ச்சிகளை மவுன மடம் பங்குத்தந்தை டோம்னிக், கப்புசின்சபை அந்தோணிராஜ், உலகம்பட்டி பங்குத்தந்தை அந்தோணிசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். அன்றிரவு நடந்த ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு ரதப்பவனியை பூலாம்பட்டி பங்குத்தந்தை அந்தோணிரமேஷ் மந்திரித்து துவக்கி வைத்தார். 26ம் தேதி இரவு தூயதோமையார் ரதம் தோமையார் மலையில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு மலையடிப்பட்டி நடுவீதியில் உயிர்த்த ஆண்டவர் மற்றும் தூயதோமையர் சந்திப்பு நடந்தது. இதில் மணிகண்டம் கார்மேல்சபை தேவராஜ் பிராத்தனை நடத்தினார். நேற்று முன்தினம் அனந்தராயன்கோட்டை மறைவட்ட அதிபர் ஜோசப்செல்வராஜ், மணப்பாறை உதவி பங்குத்தந்தை ஜஸ்டின்திரவியம், மண்ணின் திருமறைமைந்தர்கள் ஆரோக்கியம், ஸ்டீபன்கஸ்பர், தாமஸ்ஞானதுரை, சகாயராஜா, மரியஇன்னாசி, ஜெரோம் ஆகியோர் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தோமையார் பெரியதேரை மணப்பாறை பங்குத்தந்தை சகாயராஜ் மந்திரித்து துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் மலையடிப்பட்டி முக்கிய வீதிகளில் வழியாக வீதியுலாவந்து நிலைக்கு நின்றது. விழா ஏற்பாடுகளை மலையடிப்பட்டி பங்குத்தந்தை ஜோசப், பஞ்., தலைவர் தோல்நாகராஜ், ஊர்தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar