பதிவு செய்த நாள்
29
ஏப்
2014
02:04
பரமத்திவேலூர் ; நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் மகா மாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள்கள் நிறைவடைந்த நிலையில், மண்டல அபிஷேக நிறைவு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, க்னேஷ்வர பூஜை , புண்ணிய யாகம், பூர்வாங்க பூஜைகள் , பைரவர் பலி, தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும், மகா பூர்ணாகுதி , தீபாராதனை , கடம் புறப்பாடும், கலச அபிஷேகம் , மகா தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.