ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடை பெறுவது வழக்கம். அமாவாசையை முன்னிட்டு கோவில் நடை விடிய, விடிய திறக்கப்பட்டது. ஆனைமலை உப்பாறு மற்றும் ஆழியாற்றில் புனித நீராடிய பக்தர்கள் அமாவாசை முதல்கால பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து தங்கமலர் அர்ச்சனை, உச்சிகால பூஜை மற்றும் சாயரட்சை பூஜை நடந்தது.