தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம், பூவங்காபறம்பு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா மற்றும் கொடை விழா கடந்த சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் கணபதி ஹோமம், அம்மனுக்கு குங்கும அபிஷேகம், சந்தன அபிஷேகம், களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம், சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5,008 பொங்காலை வழிபாடு நேற்று நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பொங்காலையிட்டு முடிந்தவுடன் புனித நீர் தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு உச்சகால பூஜையும், தீபாராதனையும்