திண்டிவனம்: வானூர் தாலுகா கொமடிப்பட்டு கிராமத்தில் சாரதாம்பாள் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 11 ம் தேதி காலை 7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் நடக்கிறது. செல்வகணபதி, பாலமுருகன், மூலவர் அம்பாள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.