புதுச்சேரி: ஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், சிறப்பு பாலபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது. திண்டிவனம்–புதுச்சேரி நெடுஞ்சாலை பஞ்சவடீயில் அமைந்துள்ள 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில், நேற்று காலை 8.30 மணிக்கு சிறப்பு பாலபிஷேகம் நடந்தது. மழை மற்றும் உலக நன்மை வேண்டி நடந்த சிறப்பு பாலபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி சுந்தரவரதன் செய்திருந்தனர்.