மேட்டூர் : சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள புதுச்சாம்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, நேற்று பக்தர்களின் தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது. இக்கோயில் திருவிழா ஏப் 22- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தீர்த்தக் குடம், பால்குடம், பூங்கரகம் என பல்வேறு நிகழ்ச்சிகள்நடைபெற்றது. காவிரி ஆற்றிலிருந்து அம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.