சேலம்: அரிசிபாளையம் சக்தி காளியம்மன் கோவிலில் சித்திரை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் அம்மன் சூரிய கலா தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.