Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்ரா பவுர்ணமி விழாவில் பிளாஸ்டிக் ... குன்னூர் தந்தி மாரியம்மன் திருவீதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2014
01:05

ஓசூர்: ஓசூரில், நேற்று முன்தினம் நடந்த கோட்டை மாரியம்மன் கோவில், பல்லக்கு உற்சவ திருவிழாவை முன்னிட்டு, நகரமே விழாக்கோலம் பூண்டது. ஓசூர் ராம் நகரில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும், மாவிளக்கு மற்றும் பல்லக்கு உற்சவ திருவிழா கடந்த, 22 ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனுக்கு விரதம் இருந்து காப்பு கட்டி கொண்டனர். விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும், அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், கடந்த, 5ம் தேதி, அண்ணாநகர் சின்ன கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, பெண்கள் சார்பில், பூக்கரகம் எடுத்து வரப்பட்டது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு மற்றும் பல்லக்கு உற்சவ விழா நேற்று முன்தினம் காலை துவங்கியது. காப்பு கட்டி அம்மனுக்கு விரதம் இருந்து வந்த பக்தர்கள், பெரியார் நகரில் உள்ள கங்கை அம்மன் கோவில் மற்றும் அண்ணாநகர், சுண்ணாம்புஜிபி, தேர்ப்பேட்டை, சானசந்திரம், ராம்நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் இருந்து, அலகு குத்தியும், கிரேன் மூலம் விமான காவடி சுமந்து வந்தும், கோட்டை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இதனால், ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டது. கோட்டை மாரியம்மனை வழிபட, பல்வேறு பகுதிகளில் இருந்து, பல ஆயிரம் பக்தர்கள் வந்ததால், ஓசூர்-தளி சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, பஜார் வீதி, தாலுகா அலுவலகம், பெரியார் நகர், தேன்கனிக்கோட்டை சாலை, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, பழைய ஏ.எஸ்.டி.சி., அட்கோ உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல்லக்கு உற்சவ திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை, 7.30 மணிக்கு சிடி உற்சவமும், இரவு, 8 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோட்டை மாரியம்மன் திருவீதி உலா செல்லுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோட்டை மாரியம்மன் கோவில் ஆலய கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar