Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாடானை கோயில் விழாக்கள்! இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனித குலத்தை பண்படுத்தி நல்வழிப்படுத்தும் ராமாயணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2014
02:05

சேலம்: தேசிய சேவா சமிதி சார்பில், சேலத்தில், ராமாயண தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில், நேற்று, ஆர்.பி.வி.எஸ். மணியன் பங்கேற்று பேசியதாவது: ராமாயண காவியத்தில், மனித குலத்தை பண்படுத்தி, நல்வழிப்படுத்தும் வகையிலான பல்வேறு சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால் தான், இன்று ராமனை தெய்வமாகவும், வீரனாகவும், நாம் வழிபட்டு வருகிறோம். மனிதன் வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய அனைத்து விஷயங்களும், ராமாயணத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மனிதர்கள் இடையே நட்பு தோன்றுவதற்கு சந்திப்புக்களே காரணமாக அமைகிறது. நட்பு மட்டுமின்றி மனிதன் கை கொடுத்தல், கரம் பிடித்தலில் கூட ராமாயண நிகழ்வுகளே தொடர்கிறது. இலங்கையில், சீதைக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட போதிலும், பூர்வீக நாட்டில் இருந்த திருப்தி, இலங்கையில் அவளுக்கு ஏற்படவில்லை. அதே மனநிலை தான், இலங்கையில் இருந்து அகதிகளாக பல்வேறு நாடுகளில் குடியேறிய மக்களுக்கும் உள்ளது. வசதி, வாய்ப்புகள் கிடைத்த போதிலும், சொந்த பூமியில் வாழும் திருப்தி கிடைக்க வில்லை. மனிதனுக்கு பலவீனம் அதிகரிக்கும் போது, கவலை ஏற்படும். துன்பம் வரும் போது, மனிதன் கவலைப்பட மாட்டான். அதிலிருந்து விடுபடும் ஆற்றல் இல்லாதவன் தான் கவலைப்படுவான். மனிதர்களை பண்படுத்தி, பக்குவப்படுத்தும் காவியமாக ராமாயணம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar