ஆரணி: ஆரணி அடுத்த ஆகாரம் கிரா மத்தில் உள்ள திரவுபதி அம் மன் கோவிலில் அக்னி வசந்த விழாவையொட்டி கடந்த 25 நாட்களாக பகலில் தினசரி மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. முக் கிய நிகழ்வாக துரியோதனன் படுகளம் நடந்தது. கோவில் அருகில் சுமார் 70 அடி நீளத் திற்கும், 40 அடி அகலத்திற்கும் களிமண்ணால் துரியோத னன் உருவம் வடிவமைத்தி ருந் தனர். நாடக கலைஞர்கள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை நடித்து காட்டி னர். தொடர்ந்து பாஞ்சாலி சபதம் நிகழ்ச்சியும் நடை பெற்றது. மாலையில் தீ மிதிவிழாவில் 200–க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.