கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வாசவி ஜெயந்தி சிறப்பு திருவீதியுலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2014 02:05
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி ஜெயந்தி விழாவும், அன்னையர் தின விழாவும் யானை மீது அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையொட்டி இன்று (9ம் தேதி) காலை 6:00 மணிக்கு பால்குடம் எடுத்து வீதியுலா உற்சவம் நடக்கிறது. அம்மனுக்கு அபிஷேகம், சங்காபிஷேகம், மா விளக்கு பூஜையும் நடத்தப்படுகிறது. மாலை 3:00 மணிக்கு வாசவி இன்டர்நேஷனல் சார்பில் அன்னையர் தின விழா கோவில் வளாகத்தில் நடத்தப்படுகிறது. மூலவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், உற்சவரை அலங்கரித்து யானை மீது அமர்த்தி இரவு 7:00 மணியளவில் திருவீதியுலா உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஆர்ய வைசிய இளைஞர் சங்கம், மகிளா விபாக், வாசவி கிளப், வனிதா கிளப் இணைந்து செய்து வருகின்றனர்.