திருவாடானை : திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானத்துக்கு பாத்தியபட்ட பாகம்பிரியாள் சமேத வல்மிகநாத சுவாமி திருக்கோயில் சித்திரை திருவிழா மே 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவிழாவை முன்னிட்டு பல்லக்கு, கேடகம், காமதேனு போன்ற வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, தினசரி வீதி உலா வந்து பக்தர்களுக்குஅருள் பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.காலையில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.