பதிவு செய்த நாள்
10
மே
2014
11:05
கரூர்: தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும், சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா நடக்கும். இதில், கரூர் மாவட்டம் மட்டுமன்றி, திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மாலை 6 மணிக்கு கம்பம் நடுதல் விழாவுடன் துவங்கு கிறது. வரும் 16ம் தேதி பூச்செரிதல், 18ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 26ம் தேதி திருத்தேர் ஊர்வலம், 27ம் தேதி அக்னி சட்டி, அலகு, காவடி ஊர்வலம், 28ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அன்றிரவு அமராவதி ஆற்றில் நடக்கும் வாண வேடிக்கை திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து ஜூன் 5ம் தேதி பஞ்ச பிரகாரமும், 6ம் தேதி புஷ்ப பல்லக்கு, 7ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 8ம் தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது.