கரூர்: அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் மே 13ம்தேதி நடக்கிறது. கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவுக்கான துவஜாரோஹணம் எனப்படும் கொடியேற்ற நிகழ்ச்சி, கடந்த 5ம்தேதி நடந்தது. தொடர்ந்து, சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், வெள்ளி கருட வாகன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்வான ரதரோஹணம் எனும் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வரும் 13ம்தேதி காலை 5.30மணிக்கு மேல் 6 மணிக்குள் நடக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், 14ம்தேதி அமராவதி நதியில் தீர்த்தவாரியும், ஆளும் பல்லாக்கும், ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.