Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்! கேதார்நாத் யாத்திரை தவிர்க்க வேண்டுகோள்! கேதார்நாத் யாத்திரை தவிர்க்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் பக்தர் வெள்ளத்தில் சித்திரை தேர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 மே
2014
10:05

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11ம் நாளான நேற்று, பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் நடந்தது. மதுரை சித்திரைத் திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 8ல் அம்மனுக்கு பட்டாபிஷேகம், நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது; இரவு, மாசி வீதிகளில் சுவாமியும், அம்மனும் வலம் வந்து, நள்ளிரவு 12.30 மணிக்கு கோயிலுக்கு திரும்பினர். நேற்று தேரோட்டத்திற்காக, உச்சிக்கால பூஜை வரையுள்ள அனைத்து பூஜைகளும், அதிகாலை 3 மணிக்குள் முடிந்தன. அதிகாலை 4 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களுக்கு ரதரோஹணம் பூஜை நடந்தது; தேர்களை புனிதப்படுத்த இப்பூஜை செய்யப்பட்டது. தேர்களை பாதுகாக்கும் தேரடி கருப்பு சுவாமிக்கு, அதிகாலை 5.30 மணிக்கு பூஜை நடந்தது. பின், சுவாமியையும், அம்மனையும் தேர்களில் எழுந்தருள செய்தனர். சக்கரங்களுக்கு பூசணிக்காய் பலி கொடுத்து, "ஹர ஹர சங்கரா... சிவ சிவ சங்கரா... மீனாட்சி சுந்தரா என பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே, சுவாமி தேர் காலை 6 மணிக்கு புறப்பட்டது; பத்து நிமிடங்களுக்கு பின், அம்மன் தேர் புறப்பட்டது. மாசி வீதிகளில் வலம் வந்து, அடுத்தடுத்து காலை 11 மணிக்கு நிலைக்கு வந்தன.

நகைகள் அணிவிப்பு: அம்மனுக்கும், சுவாமிக்கும் மன்னர் திருமலை நாயக்கர் செய்து கொடுத்த கற்கள் பதித்த நகைகளை, அனைத்து விழாக்களிலும் அணிவிப்பது வழக்கம்; தேரோட்டத்தின்போது மட்டும் அணிவிப்பதில்லை. தேர் ஆடி அசைந்து வரும்போது, அதிர்வு காரணமாக கற்கள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக, பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால் மதியம் 3 மணிக்கு மேல், கோயிலில் இருந்து சகல மரியாதைகளுடன் கீரிடம் மற்றும் தங்க நகைகள் ஊர்வலமாக எடுத்து வந்து தேர்களில் வீற்றிருந்த சுவாமிக்கும், அம்மனுக்கும் அணிவிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக இருவரும் தனித்தனி வாகனங்களில் உலா வந்தனர். ஒரே நேரத்தில் பக்தர்கள் தங்களை தரிசிக்க வேண்டும் என்பதற்காக, நேற்றிரவு 7.30 மணிக்கு சப்தாவர்ணச் சப்பரத்தில் உலா வந்தனர். கோயிலுக்கு திரும்பிய பிறகு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, பொற்றாமரைக் குளத்தில் தேவேந்திர பூஜையுடன், கோயிலில் 12 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை கொடிசியா வளாகம் அருகில் இஸ்கான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம், பக்தர்கள் சூழ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar