பதிவு செய்த நாள்
12
மே
2014
12:05
சென்னிமலை: சென்னிமலை காமாட்சியம்மனுக்கு, பொங்கல் விழாவை முன்னிட்டு, 505 குடம் பால் அபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னிமலை காமாட்சி அம்மன் பொங்கல் விழா, வரும், 15ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, கடந்த, ஏழாம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று காலை, பால் குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருவீதிகளில் மேளதாளத்துடன், ஆண்களும், பெண்களும், பால் குடத்துடன் ஊர்வலமாக வலம் வந்தனர். பால் குடங்கள், சென்னிமலை, நான்கு ரத வீதிகளில், ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்த பின், காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின் அன்னதானம் வழங்கப்பட்டது. பொங்கல் விழாவில், நாளை கும்பம் பாலித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி காமட்சியம்மன் மாவிளக்குக்குடன், திருவீதிகளில் பவனி வந்து, தீபாராதனை நடக்கிறது. 15ம் தேதி காலை, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, மூன்று மணிக்கு, மேலப்பாளையம் மாதேஸ்வர நகரில் இருந்து, அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு, கோவிலை வந்து சேரும். அன்று, மாலை நான்கு மணிக்கு களத்துக்காட்டில் இருந்து, மாவிளக்கு ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை வந்தடையும். 16ம் தேதி, வெள்ளி இரவு மஞ்சள் நீர் மறுபூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.