மப்பேடு : மப்பேடு அருகே உள்ள, முத்துவீர சுவாமி கோவிலில், 37ம் ஆண்டு தீமிதி திருவிழா, இன்று நடைபெற உள்ளது. மப்பேடு அடுத்த, செங்காடு கிராமத்தில் உள்ள, முத்துவீர சுவாமி கோவிலில், 37ம் ஆண்டு தீமிதி திருவிழா, இன்று மாலை, 6:00 மணியளவில், கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது.பக்தர்கள் விரதமிருந்து, தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டு, நேர்த்திக் கடனை செலுத்த இருக்கின்றனர்.