பதிவு செய்த நாள்
12
மே
2014
12:05
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள நமையூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று நடந்தது. நமையூரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா கடந்த மாதம், 27ம் தேதி பூச்சொரிதல் விழாவும், கடந்த, 4ம்தேதி காப்பு காட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. பொங்கல் வைத்து படைத்தல், ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. கடந்த, 9ம் தேதி, பால் குடம் எடுத்தல், பொங்கல் பூஜை நடந்தது. இதனையடுத்து, 10ம் தேதி பொங்கல் பூஜை, மாவிளக்கு பூஜையும் நடந்தது. தேரோட்ட விழா, நேற்று நடந்தது. நமையூர் சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர், மாரியம்மனை வழிப்பட்டனர். கேரளா செண்டை மேளத்துடன், தேர் திருவீதி உலா வந்து நிலை நின்றது. அன்னதானம் நடந்தது. இரவு இசைகச்சேரி நடந்தது. இன்று (12ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழாவுடன், விழா நிறைவு பெறுகிறது.