பதிவு செய்த நாள்
13
மே
2014
03:05
காரிமங்கலம்: காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில், சித்ரா பவுர்ணமி கிரிவலப்பூஜை நாளை (மே, 14) நடக்கிறது. இதையொட்டி, நாளை காலையில், ஸ்வாமிக்கு ருத்ரா அபிஷேகம் உட்பட சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு நடக்கும், கிரிவல பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் வருகின்றனர். பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.
* தர்மபுரி கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில், பாரதிபுரம் காசிவிஸ்வநாதர் கோவில் ஆகியவற்றில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நாளை காலை, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் நடக்கிறது. மாலையில், கிரிவலம், அன்னதானம் நடக்கிறது.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மாலையில், கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, குருக்கள் மோகன்குமார் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.
* பாலக்கோடு பால்வண்ணநாதர், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில் ஆகியவற்றில் நாளை காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.