Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூவரசன்குப்பம் கோவிலில் லட்சுமி ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வையாளி சேவை! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதராஜபெருமாள் கருடசேவை கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2014
05:05

காஞ்சிபுரம்: பக்தர்கள் வெள்ளத்தில், வரதராஜபெருமாள் கருட வாகனத்தின் மீது, வீதியுலா வந்தார். காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள வரதராஜபெருமாள் கோவிலில், கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன், வைகாசி மாத பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதி்ல், மூன்றாம் நாள் உற்சவமான பிரசித்தபெற்ற கருடசேவை உற்சவம் நடந்தது. இதில், அதிகாலை 4:20 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தின் மீது, வரதராஜ பெருமாள் திருஆபரணம் அணிந்து எழுந்தருளினார். பின்னர், கோபுர வாசலில், தொட்டாட்சியர் சேவை மற்றும் கோபுர தரிசன சேவை நடந்தது. பின்னர், முன்புறம் அத்யபாக கோஷ்டியும், பின்புறம் வேதபாராயண கோஷ்டிகள் வேதமந்திரங்கள் ஓத, சூரிய மேளம், பேரிமேளம், குதிரை, யானை புடைசூழ, பக்தர்கள் வெள்ளத்தில் கருட வாகனத்தின் மீது வரதராஜபெருமாள், பிள்ளையார்பாளையம் மற்றும் நான்கு ராஜவீதிகள் மற்றும் முக்கிய வீதிகளில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், பகல் 12:30 மணிக்கு மீண்டும் கோவிலை வந்தடைந்தார். அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெருமாளை தரிசிப்பதற்காக நகரத்தில் குவிந்தனர். மேலும், பக்தர்களுக்காக பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டன. மாவட்ட எஸ்.பி.விஜயக்குமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar