Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் தங்கக்குதிரையில் ஆற்றில் ... வெள்ளை குதிரையில்.. மானாமதுரை வைகையில் இறங்கிய வீர அழகர்! வெள்ளை குதிரையில்.. மானாமதுரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் "பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 மே
2014
11:05

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பக்தர்களின் "கோவிந்தா கோஷம் முழங்க "கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். பரமக்குடி சவுராஷ்ட்ஸ்ட்ரா, பிராமன மகாஜனங்களுக்கு பாத்தியமான, சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா மே 9ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் இரவு சுவாமி சிம்மாசனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் உலா வந்தார். மே 13ல், காலை 11 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. நேற்று, அதிகாலை 2 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் வேல், கம்பு, ஈட்டி, வளரியுடன், கோடாரி கொண்டையிட்டு "கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார். தீவட்டிகள் வெளிச்சத்தில், வான வேடிக்கைகள், மேள, தாளம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் "கோவிந்தா கோஷத்துடன் அதிகாலை 3.30 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். நேற்று காலை 9 மணிக்கு பெருமாள் தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீரை பீச்சியடித்து அழகரை வரவேற்றனர். பின்னர் காட்டுப்பரமக்குடி மஞ்சள்பட்டினம், ஆற்றுப்பாலம், பஜார், எமனேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக இரவு 10 மணிக்கு காக்காதோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். அவ்வமயம் 300 க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி, மதியம் 2 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் காட்சியளித்õர். இரவு 7 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரம் வைகை ஆற்று மணலில் 3 கி.மீ., தொலைவில் உள்ள காக்கா தோப்பு பெருமாள் கோவில் வரை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி அகஸ்தியன், டிரஸ்டிகள் மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar