தூத்துக்குடி : தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று 504 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பாகம்பிரியாள் அம்பாளுக்கு தங்கப் பாவாடை கட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் கோயில் வளாகத்தில் பெண்கள் கலந்து கொண்டு 504 மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.