உடன்குடி : மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி ஞானப்பிரசுன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோயிலில் சித்ராபௌர்ணமி சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் 18 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.