Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கெங்கையம்மன் சிரசுத்திருவிழா: 2 ... காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்! காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர் மலையில் கள்ளழகருக்கு வரவேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 மே
2014
10:05

அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தந்து, நேற்று காலை அழகர் மலைக்கு திரும்பிய கள்ளழகரை "கோவிந்தா கோஷம் முழங்க, மலர் தூவி, திருஷ்டி சுற்றி பக்தர்கள் வரவேற்றனர். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 10ல் துவங்கியது. மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள, மே 12 மாலை தங்கப் பல்லக்கில் புறப்பட்டார். மே 13ல் மூன்றுமாவடி, புதூர், அவுட்போஸ்டில் நடந்த எதிர்சேவையில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வரலாற்று சிறப்புமிக்க அழகர், வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 14ல் நடந்தது. பின் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம், தசாவதாரம், பூப்பல்லக்கு என பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் மாலை புதூரில் இருந்து புறப்பட்ட அழகர், இரவு அப்பன் திருப்பதியில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். பின், அதிகாலை புறப்பட்டு கோயிலுக்கு சென்றார். நேற்று காலை 10.30 மணிக்கு கோயில் முன் உள்ள 18ம் படி கருப்பண சுவாமி சன்னதி முன் எழுந்தருளினார். கள்ளழகருக்கு அணிவித்திருந்த மாலைகள், கருப்பண சுவாமிக்கு சாத்தப்பட்டன. பின், அழகருக்கு தீப ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் "கோவிந்தா கோஷம் முழங்க, சுவாமியை மலர் தூவி வரவேற்றனர். 18 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி மூன்று முறை அழகரை வலம் வந்து திருஷ்டி கழித்தனர். கோயிலுக்குள் சென்ற அழகருக்கு தீபாராதனை நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் வரதராஜன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar