Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் நரேந்திர ... சேதுக்கரை கடற்கரையில் படித்துறை: பக்தர்கள் வலியுறுத்தல்! சேதுக்கரை கடற்கரையில் படித்துறை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி வசந்த உற்சவத்தில் துரியோதனன் படுகளம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 மே
2014
11:05

ஆர்.கே.பேட்டை : அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று, துரியோதணன் படுகளம் நடந்தது. இதில், மகனை பறிகொடுத்த காந்தாரி, போர்க்களத்தில் இருந்தவர்களை துடைப்பத்தால், நைய புடைத்தாள். இதனால், பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூர் திரவுபதியம்ம்ன கோவிலில், கடந்த 8ம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கல்யாணம் கடந்த திங்கட்கிழமை திரவுபதி, தர்மர் திருக்கல்யாணம், செவ்வாய் சுபத்திரை, அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடந்தது. வெள்ளிக்கிழமை அலகு பானை எனும் பூங்கரகம் நிலை நிறுத்தப்பட்டது. நேற்று காலை, துரியோதனன் மற்றும் துச்சாதனன் 18ம் நாள் போரில், பாண்டவர்களால் கொல்லப்பட்டனர். தன் மகன்களை பறிகொடுத்த காந்தாரி, போர்க்களத்தில் இருந்தவர்களை துடைப்பத்தால் நைய புடைத்தாள். இதனால், மிரண்டு ஓடிய பக்தர்கள், பின் தாங்களாக விரும்பி அந்த அடியை ஏற்று கொண்டனர். மாலை 6:00 மணியளவில், காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இன்று காலை தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. திருத்தணி திருத்தணி ஒன்றியம், குடிகுண்டா, திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம், கூளூர் மற்றும் ராமஞ்சேரி ஆகிய நான்கு திரவுபதியம்மன் கோவிலில்களில் கடந்த, 4ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. தினமும், காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு மகாபாரத நாடகமும் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.மாலை, 6:30 மணிக்கு, 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர். தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar