விழுப்புரம் : விழுப்புரம் சங்கர மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவர் ஜயந்தி மஹோத்ஸவத்தையொட்டி நடைபெற்று வரும் அதிருத்ர சத சண்டி மஹாயாகத்தில், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு நேற்று பூஜை செய்யப்பட்டது. உலக நன்மைக்காகவும் இந்த ஹோமம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.