மயிலாடுதுறை, : நாகை மாவட்டம், தருமபுரம் ஞானாம்பிகை உடனுறை ஞானபுரீசுவரர் கோயில்தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக சிறப்பு வழிபாடு, அபிஷேக, ஆராதனைகளும், சுவாமி அம்பாள் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் மே 16-ம் தேதிநடைபெற்றது. தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. தருமை ஆதீனம் 26-வது குருமகா சன்னிதானம் தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.