பதிவு செய்த நாள்
20
மே
2014
11:05
கரூர்: தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோ றும், சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா நடந்து வருகிறது. இதில், கரூர் மாவட்டம் மட்டுமன்றி, திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொது மக்களும் ஆண்டுதோறும் பங்குபெற்று வருகின்றனர். நடப்பாண்டு வரும், 11ம் தேதி கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதல் விழாவுடன் துவங்கியது. கடந்த 16 ம் தேதி விடிய விடிய பூச்சொரிதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று பக்தர்கள் விரதம் இருக்கும் வகையில், நேற்று முன்தினம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் கோவிலில் காப்பு கட்டி கொண்டனர். வரும் 26ம் தேதி திருத்தேர் ஊர்வலமும், 27 ம் தேதி அக்னி சட்டி, அலகு, காவடி ஊர்வலம் 28ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடக்க உள்ளது. அன்றிரவு அமராவதி ஆற்றில் நடக்கும் வாண வேடிக்கை திரு விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து வரும் ஜூன் மாதம் 5 ம் தேதி பஞ்ச பிரகாரமும், 6 ம் தேதி புஷ்ப பல்லக்கு, 7 ம் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் 8 ம் தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது.