பதிவு செய்த நாள்
20
மே
2014
06:05
பழநி: பழநியில் அக்னி நட்சத்திர விழா "சித்திரை கழுவு நிறைவு பெறுவதை, முன்னிட்டு, 300 க்கு மேற்பட்ட மாட்டுவண்டிகளில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அக்னி நட்சத்திரம் காலகட்டமான சித்திரையின் பின் 7 நாட்கள், வைகாசியில் முன் 7 நாட்களை, "சித்திரை கழுவு என அழைக்கின்றனர். இந்த நாட்களில் பழநிகோயிலில் கிரிவலம் வருவது சிறப்பாகும். கிரிவல பாதையிலுள்ள கடம்ப மரத்திலிருந்து, வீசும் சஞ்சீவி மூலிகை காற்று, சகல நோய்களை, தீர்க்க வல்லது என்ற ஜதீகம் உள்ளது. இதன் காரணமாக, கிரிவீதியில் உள்ள கடம்ப மரத்தில் பூத்து குலுங்கும் பூவையும், இலைகளையும், பெண்கள் தங்களது தலையில் சூடிக்கொண்டு மலையை கிரிவலம் வருகின்றனர். பொள்ளாச்சி, உடுமலை, கோவை பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், 300 க்கு மேற்பட்ட மாட்டு வண்டியில் பழநி வந்துள்ளனர். நாளை அதிகாலை 3 மணி முதல், மலையை கிரிவலம் வந்து 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்கின்றனர். மாலை 5 மணிக்கு மேல், ஒருதரப்பினர் கிரிவலம் வந்து, பின் மலைக்கோயிலில் ராஜ அலங்காரத்தில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.