பதிவு செய்த நாள்
21
மே
2014
12:05
திருத்தணி : கங்கையம்மன் கோவிலில், ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. திருத்தணி அடுத்த, கோரமங்கலம் கிராமத்தில், ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, துர்க்கையம்மன் கோவில் வளாகத்தில், காலை, 9:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு, பூ கரகம் கிராம வீதிகளில் திருவீதியுலா வந்தது. மாலை, 5:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.இரவு, 8:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூ கரகத்துடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.