விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் வைகாசி மாத விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.